×

திருமருகல் அருகே வாய்க்கால்களில் தூர்வாரும் திட்டப்பணி துவக்க விழா

நாகப்பட்டினம், மார்ச் 9: நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் அருகே திருப்புகலூரில் வாய்க்கால்களில் சிறப்பு தூர்வாரும் திட்டப்பணிகள் துவக்க விழா நடந்தது. நன்னிலம் காவிரி வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். திருமருகல் நீர்வளத்துறை உதவி பொறியாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் காவிரிவடிநிலக்கோட்டம் செயற்பொறியாளர் இளங்கோ தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தார்.

திருப்புகலூர் முடிக்கொண்டான் ஆற்றில் இருந்து போலகம் பாசனம் பெறும் போலகம் பாசன வாய்க்கால் ரூ. 6 லட்சம் மதிப்பில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு தூர்வாரம் பணிகள் தொடங்கப்பட்டது. இதில் அரசு அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அதேபோல் நெடுஞ்சேரி, புத்தகரம், அனந்தநல்லூர், தண்டாளம், ஆலத்தூர், மானாம்பேட்டை, திருக்கண்ணபுரம், சேகல், வடகரை, கீழப்பூதனூர், மருங்கூர் பகுதிகளில் 77 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாசன வாய்க்கால்கள் ரூ.90 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags : Thirumarugal ,Nagapattinam ,Tirupugalur ,Nannilam Cauvery Basin ,Sub-Division Assistant Executive Engineer ,Subramanian ,Thirumarugal Water Resources Department ,Assistant Engineer ,Selvakumar ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்