×

நிஷாந்தை துணை முதல்வராக்க ஜேடியு முடிவு

பாட்னா: பீகார் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் விலகும் நிலையில் அவரது மகன் நிஷாந்த் துணை முதல்வராக்கப்பட உள்ளார். இதுதொடர்பாக நிதிஷ் குமார் வீட்டில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

இது குறித்து நிதிஷின் நெருக்கமான எம்எல்ஏ ஹரி நாராயணன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘எம்எல்ஏக்கள் கூட்டத்தில், நிதிஷாதை அடுத்த துணை முதல்வராக்கவும், எம்எல்சியாக்கவும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. நாளை (இன்று) அவர் முறைப்படி கட்சியில் இணைவார். அடுத்த மாதம் அவர் எம்எல்சியாக தேர்வு செய்யப்படுவார்’’ என்றார்.

Tags : JD ,Nishant ,Nitish Kumar ,Chief Minister ,Bihar ,United Janata Dal Party ,Nitish ,
× RELATED தென்மேற்கு ரயில்வேயில் 295 பணிக்கான...