திருச்சி, மார்ச் 4: திருச்சி செஷன்ஸ் கோர்ட் பகுதியில் குட்கா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கடந்த மார்ச் 2ம்தேதி போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெரிய மிளகுபாறை அருகே குட்கா விற்ற புங்கனூர் நெடுமலை பகுதியைச் சேர்ந்த லோகநாதன்(23) என்பவரை செஷன்ஸ் கோர்ட் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 60 கிராம் குட்கா பறிமுதல் செய்தனர்.
