×

14 வயது சிறுமிகளுக்கு புற்றுநோய் தடுப்பூசி திட்டம் வரும் 28ம் தேதி தொடக்கம்

புதுடெல்லி: நாடு முழுவதும் 14 வயது சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்புக்கான எச்பிவி தடுப்பூசி செலுத்தும் தேசிய திட்டம் வரும் 28ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி வரும் 28ம் தேதி ராஜஸ்தானின் அஜ்மீரில் தொடங்கி வைப்பார் என கூறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 14 வயது சிறுமிகள் அனைவருக்கும் எச்பிவி 16 மற்றும் 8 வகைகளுக்கான ஒற்றை டோஸ் தடுப்பூசி போடப்படும். இந்த தடுப்பூசி அவரவர் சுய விருப்பம் மற்றும் பெற்றோரின் ஒப்புதலுடன் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறுமிகள் செலுத்திக் கொள்ளலாம்.

Tags : New Delhi ,Union Health Ministry ,
× RELATED இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி...