×

மறை மாவட்ட ஆயர்களாக தலித் கிறிஸ்தவர்களை நியமிக்ககோரி ஆர்ப்பாட்டம்


கும்பகோணம், பிப்.8: மறைமாவட்ட ஆயர்களாக தலித் கிறிஸ்தவர்களை நியமிக்ககோரி கும்பகோணத்தில் தலித் கிறிஸ்தவர் பேரவையினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கும்பகோணம் காந்தி பூங்கா அருகே தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவை சார்பில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மறை மாவட்டங்களின் ஆயர் பதவிகளிலும், விரைவில் பணி ஓய்வு பெற இருக்கும் கும்பகோணம், மற்றும் தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர்கள் பணி, ஆயர் பணியிடங்களில் தலித் கிறிஸ்தவர்களை நியமனம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவையை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது தலித் கிறிஸ்தவர்களை ஆயர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர்.  மேலும் 121 ஆண்டுகள் பழமையான கும்பகோணம் மறை மாவட்டத்தில் இதுவரை ஒரு ஆயர் கூட தலித் பிரிவைச் சேர்ந்தவர்கள் இல்லை. எனவே தலித் கிறித்தவர்களை ஆயராக நியமிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

Tags : Demonstration ,district bishops ,Dalit Christians ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்