×

தஞ்சையில் மாநில கபடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு

தஞ்சை,பிப்.8: தஞ்சையில் மாநில அளவிலான கபாடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் வருகிற 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் மாநில அளவிலான இளையோருக்கான கபடி போட்டி நடைபெறுகிறது.
தஞ்சை மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் நடைபெற்ற கபடி வீரர்கள் தேர்வு முகாம், தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்திலிருந்து 20 வயதுக்கு உட்பட்ட 200 ஆண்கள், 60 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தனித்தனியாக கபடி போட்டி நடந்தது. இதில் இருந்து தலா 12 ஆண்கள், பெண்கள் தேர்வு செய்யப்படனர்.

இந்த தேர்வு முகாம் நிகழ்ச்சியை தஞ்சை மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தொடங்கி வைத்தார். முன்னாள் இந்திய கபடி அணி வீரரும், செயலாளருமான காசிபாஸ்கரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் தனசேகரன், அமைப்பு செயலாளர் பக்கிரிசாமி, துணை தலைவர் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேர்வானவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, மாநில அளவில் நடைபெறும் கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags : state kabaddi tournament ,Tanjore ,
× RELATED சட்டவிரோத மணல் கொள்ளை புகாரில்...