×

சட்டவிரோத மணல் கொள்ளை புகாரில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் தஞ்சை, திருச்சி உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்..!!

சென்னை: சட்டவிரோத மணல் கொள்ளை வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தஞ்சை, திருச்சி, வேலூர், அரியலூர், கரூர் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் விசாரணைக்கு நேரில்  ஆஜராகியுள்ளனர். மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருந்தது. மணல் கொள்ளை முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு என அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருந்தது.

The post சட்டவிரோத மணல் கொள்ளை புகாரில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் தஞ்சை, திருச்சி உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்..!! appeared first on Dinakaran.

Tags : Collectors ,Tanjore ,Trichy ,Enforcement Department ,Chennai ,Vellore ,Ariyalur ,Karur ,Nungambakkam, Chennai ,Dinakaran ,
× RELATED தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல்...