வேதாரண்யம், பிப்.8: வேதாரண்யம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன் 12ம் வகுப்பு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வேதாரண்யம் சேது சாலையில் சிக அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் கொண்ட பழம்பெரும் பள்ளியான இப்பள்ளியில் 1995ம் ஆண்டு 12ம் வகுப்பு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் படித்த மாணவர்கள் தற்போது அரசு பணிகளிலும் தொழில் அதிபர்களாகவும் உள்ளனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் படித்த பள்ளியை ஆர்வமுடன் சுற்றிப்பார்த்து பள்ளியின் வளர்ச்சி குறித்தும் வியந்து பாராட்டினர். ஒருவருக்கொருவர் நட்பை மகிழ்ச்சியுடன் பறிமாறிக்கொண்டனர். முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் நண்பர்களுடன் செல்பிஎடுத்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பள்ளியின் வளர்ச்சிக்கு உதவுவதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.