தர்மபுரி, பிப்.8: தர்மபுரி மாவட்ட பாஜக ஆலோசனை கூட்டம் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. முன்னாள் எம்எல்ஏவும், மாநில செயலாளருமான பாஸ்கர் கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா காலக்கட்டத்தில் பல்வேறு சிரமத்திற்கு இடையில், மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட் தாக்கலில் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை திட்டம், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்டவைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்திய அரசின் ராணுவ அதிகாரிகளை உருவாக்கும் பள்ளிகளான சைனிக் பள்ளி 100 அமைக்கவுள்ளன. இதில் ஒரு சைனிக் பள்ளியை தர்மபுரி மாவட்டத்திற்கு கொண்டு வர, மத்திய அரசியிடம் கேட்டு வாங்குவோம். பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்னைகள், தீர்க்கப்படாத பிரச்னைகளை மத்திய அரசு தீர்த்துள்ளது. இவ்வாறு கூறினார். பேட்டியின் போது, மாவட்ட பொதுச்செயலாளர்கள் வெங்கட்ராஜ், சரவணன், முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.