×

அரியலூர் மாவட்டத்தில் தேசிய அளவிலான போட்டிகளில் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை

அரியலூர், பிப்.5: அரியலூர் மாவட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகையினை கலெக்டர் ரத்னா வழங்கினார். அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்களுக்கென வழங்கப்பட்ட ஊக்கத்தொகையினை கலெக்டர் ரத்னா நேற்று வழங்கினார். 2018-2019ம் ஆண்டில் தேசிய அளவிலான நடைபெற்ற போட்டிகளில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

இதில், தடகள போட்டியில் 2ம் இடம் பெற்ற அட்சயா மற்றும் பூப்பந்து போட்டியில் 2ம் இடம் பெற்ற வசந்தகுமார் ஆகியோர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் விளையாட்டு உபகரணங்கள் வாங்கிட வழங்கப்பட்ட ஊக்கத்தொகை தலா ரூ.4000க்கான காசோலையினை கலெக்டர் ரத்னா வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கி, பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று பதக்கங்களை பெறுமாறு வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ., ஜெய்னுலாப்தீன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயக்குமார் ராஜா மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : winners ,level competitions ,Ariyalur district ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...