×

விபத்தில் வாலிர் பலி

காடையாம்பட்டி,  பிப்.5: தர்மபுரி மாவட்டம் தொப்பூர் ரயில் நிலைய பகுதியைச் சேர்ந்த  கந்தசாமி மகன் கணேசன் (21). இவர், நேற்று காலை காடையாம்பட்டி அருகே  பூசாரிப்பட்டி பகுதியிலிருந்து தீவட்டிப்பட்டி நோக்கி டூவீலரில் சென்று  கொண்டிருந்தார். அப்போது, தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற  வாகனம் மோதியதில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த  தகவலின்பேரில், தீவட்டிப்பட்டி போலீசார் விரைந்து சென்று கணேசன் உடலை  மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஒரு  வழக்குப்பதிந்து மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறதித்து விசரித்து  வருகின்றனர்.

Tags : Valir ,accident ,
× RELATED மின்விளக்குகள் எரியாத புதிய மேம்பாலம்: பெரியபாளையம் அருகே விபத்து அபாயம்