×

மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 56 பேர் கைது வேலூரில் 3வது நாளாக

வேலூர், பிப்.5: வேலூரில் 3வது நாளாக நேற்று மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 56 பேரை போலீசார் கைது செய்தனர். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை தொடர வேண்டும், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க ேவண்டும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு ₹50 லட்சம் இழப்பீடு வழங்க ேவண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.வேலூரில் நேற்றும் 3வது நாளாக கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக 56 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags : servants ,Vellore ,
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து