×

காதலித்து ஏமாற்றிய தீயணைப்பு வீரரை போராடி திருமணம் செய்த இளம்பெண்

திருமங்கலம், பிப்.5: திருமங்கலம் அருகேயுள்ள தூம்பக்குளத்தை சேர்ந்தவர் பகத்சிங்(28). விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இதே கிராமத்தை சேர்ந்த கார்த்திகை செல்வி(23). கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பகத்சிங்கிற்கு அவரது பெற்றோர் வீட்டில் பெண் பார்க்க துவங்கியுள்ளனர். இதுகுறித்து தனது காதலியிடம் பகத்சிங் கூறி புலம்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகைசெல்வி, பகத்சிங் பெற்றோரை சந்தித்து தங்களது காதலை கூறியுள்ளார். அதனை ஏற்கமறுத்த் அவர்கள் கார்த்திகை செல்வியை துரத்தியுள்ளனர். பெற்றோர் ஒப்புதல் இல்லாததால் பகத்சிங்கும் கார்த்திகைசெல்வியை மணம் செய்து கொள்ளமுடியாது என மறுத்துள்ளார்.

இதனால் திருமங்கலம் மகளிர் போலீசில் தனது காதலன் மற்றும் பெற்றோர் மீது கார்த்திகை செல்வி  புகார் செய்தார். போலீசார் விசாரணைக்கு அழைத்த போது பகத்சிங் வரமறுத்து ஆஜராகவில்லை. நீதிமன்றத்தில் தன்னை கைது செய்யக்கூடாது என மனுதாக்கல் செய்தார். நீதிமன்றம் பகத்சிங்கை போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து மகளிர் ஸ்டேஷனில் பகத்சிங் நேற்று முன்தினம் நேரில் ஆஜரானார். காதலி கார்த்திகைசெல்வியை அவரிடம் பேச போலீசார்  அனுமதித்தனர். இதனை தொடர்ந்து தனது காதலியை ஏற்றுக்கொள்ளவதாக தீயணைப்புவீரர் பகத்சிங் தெரிவித்ததை தொடர்ந்து இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

Tags : firefighter ,
× RELATED தீவுத்திடலில் களைகட்டியது உணவு திருவிழா