×

மனித நேய வாரவிழா போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு

நாகர்கோவில், பிப்.4: ஆதிதிராவிடர் நலம் மற்றும் தீண்டாமை ஒழிப்பிற்கான மனிதநேய வாரவிழா ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளி மாணவ மாணவியர்களை கொண்டு பள்ளிகளில் ஜனவரி 24ம் தேதி முதல் ஜனவரி 29 முடிய மனிதநேய வாரவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியர்களிடையே பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, நடனப்போட்டி, குறள் ஒப்புவித்தல் போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளில் பயின்று, வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை, மாவட்ட கலெக்டர் அரவிந்த் பாராட்டினார். அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

Tags : winners ,competitions ,
× RELATED குத்துச்சண்டை போட்டியில் கிருஷ்ணகிரி மாணவர்கள் வெற்றி