கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக பிரமுகர் தனபால் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக சுமார் 112 யூனிட் ஆற்று மணலை வைத்திருந்ததால் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆற்று மணலை பறிமுதல் செய்தனர். மணலை பறிமுதல் செய்ய முயன்ற போது அங்கு கூடிய அதிமுகவினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, சுமார் 2 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
