×

260 பேர் பலியான அகமதாபாத் விபத்து திட்டமிட்ட செயல்: இத்தாலி குற்றச்சாட்டு

புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்து திட்டமிட்ட செயல் என்று இத்தாலி குற்றம்சாட்டி உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 260 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விபத்துக்கு விமானிகளின் கவன குறைவுதான் காரணம் என இத்தாலி நாட்டை சேர்ந்த நாளிதழ் கோரியர் டெல்லா செராவின் செய்தி வெளியிட்டிருக்கிறது. விமான விபத்துக்கான காரணம் குறித்த முதற்கட்ட விசாரணையில், என்ஜினுக்கு எரிபொருளை அனுப்பும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதால்தான், என்ஜின் ஆஃப் ஆகி பின்னர் விபத்து ஏற்பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இந்த சுவிட்ச் தானாக ஆஃப் ஆகிவிடாது. அப்படியெனில் விமானிகளில் யாராவது ஒருவர் வேண்டும் என்றே சுவிட்சை ஆப் செய்திருக்க வேண்டும் . கேப்டன் சுமீத் சபர்வால் தான் சுவிட்சை ஆப் செய்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இவர் விவாகரத்து உள்ளிட்ட காரணங்களால் மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே அவர் இதை செய்திருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த தகவலை இத்தாலி செய்தி ஊடகம் வெளியிட்டிருக்கிறது.

* இந்தியா எதிர்ப்பு
ஏர் இந்தியா விபத்துக்கு விமானி மீது குற்றம் சாட்டும் இத்தாலிய அறிக்கை குறித்து இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விமான விபத்து விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும், இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. சரிபார்க்கப்படாத அறிக்கைகள் பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகிறது என்று கூறி இத்தாலிய ஊடக அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம் நேற்று நிராகரித்தது. இத்தாலி பத்திரிகையின் அறிக்கைகள் தவறானது மற்றும் ஊகமானது என்று தெரிவித்துள்ளது.

Tags : Ahmedabad crash ,Italy ,New Delhi ,Ahmedabad ,Air India ,Ahmedabad, Gujarat ,
× RELATED ஒடிசா மாநில உயர் கல்வி நிறுவனங்களில்...