×

கொலை வழக்கில் 5 பேர் மீது குண்டாஸ்

 

தேனி, பிப்.10: தேனி மாவட்டம் கோம்பையைச் சேர்ந்த ராஜ்குமார் (55) என்பவருக்கும், உத்தமபாளையம் தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்த முத்துராஜ் (46) என்பவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 7ம் தேதி ராஜ்குமார், ஆனைமலையான் பட்டி வெள்ளைக்கரடு டாஸ்மாக் கடை அருகே தலையில் பலத்த காயத்துடன் சடலமாக கிடந்தார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கம்பத்தைச் சேர்ந்த முகமது சிராஜூதீன், கமுதி அருகே கரிசல் குளத்தைச் சேர்ந்த ராமர் (36), மதுரையைச் சேர்ந்த கருணா மணி (35), தூத்துக்குடி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த முனியசாமி (36) ஆகியோர் ராஜ்குமாரை கொலை செய்தது தெரிய வந்தது.

Tags : Theni ,Raj Kumar ,Theni District Comba ,Muthuraj ,Uttamapaliam Water Tank Street ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...