டெல்லி : பிரதமர் மோடியின் பதிலுரை இல்லாமலேயே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நிறைவேறியது. மக்களவையில் ராகுல் காந்தி பேச அனுமதிக்காத விவகாரத்தால் பிரதமர் மோடியின் பதிலுரையும் தடைபட்டது. பாஜக ஆட்சியில் முதல்முறையாக பிரதமர் பதிலுரை இன்றி தீர்மானம் நிறைவேறியுள்ளது. மக்களவையில் பிரதமர் மோடியின் பேச்சு தடைபட்ட நிலையில் மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று மாலை பேச உள்ளார்.
