×

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அழைப்பு

திருச்சி,பிப்.2: திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நம் நெஞ்சங்களில் வாழும் இதயதெய்வம் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழக முதல்வர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக துணை முதல்வர், கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க திருச்சி மண்டல, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் வழிகாட்டுதலின்படி பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாளான நாளை(3ம்தேதி)புதன்கிழமைகாலை 10.30 மணியளவில் திருச்சி மேலசிந்தாமணியில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படும். அதுசமயம் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் மாவட்ட கழக நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகள், தலைமை கழக பேச்சாளர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம் என அவர் அதில் கூறியுள்ளார்.

Tags : Vellamandi Nadarajan ,
× RELATED அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன்...