×

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி பரிதாப பலி

பாடாலூர், பிப்.2: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே உள்ள மாவிலங்கை கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி பொன்னரும்பு (70). இவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இவர் அந்த பகுதியில் உள்ள ராஜராஜன் என்பவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : well ,
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...