×

கம்யூனிசம் என்பது ஒரு உணர்வு; மனிதர்கள் எல்லோருக்கும் ஏற்பட வேண்டிய உணர்வு: இந்திய கம்யூனிஸ்ட் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் உரை

சென்னை: கம்யூனிசம் என்பது ஒரு உணர்வு; மனிதர்கள் எல்லோருக்கும் ஏற்பட வேண்டிய உணர்வு என இந்திய கம்யூனிஸ்ட் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் ‘எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது நமது இலக்கு. கருப்பு, சிவப்பு, நீலம் கொள்கைகள் நிலைபெற வேண்டும். நமது தோழமைதான் பாசிசம், மதவாதம், சர்வாதிகாரத்தை வீழ்த்தும். சமத்துவ சமுதாயம்தான் நமது பொது இலக்கு. திராவிட இயக்கத்துக்கும் பொதுவுடமை இயக்கத்துக்கும் இலக்கு ஒன்றே தான்.கன்னிமாரா நூலகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலையை பிப்ரவரி 6ம் தேதி திறந்து வைக்கவுள்ளேன்’ எனவும் முதலமைச்சர் உரையாற்றினார்.

Tags : Chief Minister ,Indian Communist Centennial Celebration ,Chennai ,MLA ,of ,Communist Century of India ,K. Stalin ,
× RELATED திருத்தணி அருகே சாலையோர வீட்டின்மீது...