×

மாசி நினைவிடத்தில் மலரஞ்சலி

அரூர், ஜன.30: அரூரைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. முத்துக்கவுண்டர் மகனும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விவசாய பிரிவு முன்னாள் மாநில தலைவருமான மாசி 15ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, அரூரில் முத்துக்கவுண்டர் நகரிலுள்ள, அவரது நினைவிடத்தில் தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கோவி.சிற்றரசு, வட்டார தலைவர் சுபாஷ், நகர தலைவர் கணேசன், ஓபிஎஸ் மாவட்ட தலைவர் நவின், மாவட்ட துணைத்தலைவர் வேடியப்பன், நிர்வாகிகள் ஆறுமுகம், வேடியப்பன், மோகன், பச்சை முனுசாமி, முருகேசன், சுந்தரம், குமார், விக்ரம் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.

Tags : Masi Memorial ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா