×

பழையகாயல் அருகே முதியவர் தற்கொலை

ஆறுமுகநேரி, ஜன.30: பழையகாயல் அருகேயுள்ள ராமசந்திரபுரத்தைச் சேர்ந்தவர் ஊர்பிச்சை(71). இவரது மனைவி அம்மாகனி. இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. மகன் பலவேசம் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மகள் தங்ககனி பெற்றோருடன் சேர்ந்து வசித்து வருகிறார். ஊர்பிச்சைக்கு 5ஆண்டுகளாக இளைப்பு நோய் இருந்துள்ளது. அதற்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். நேற்று அதிகாலை 2 மணி வரை விழித்திருந்ததால் மகள் தூங்க கூறியுள்ளார். அதிகாலை 4 மணிக்கு மனைவி எழுந்து பார்த்த போது ஊர்பிச்சை வீட்டின் முன்பு தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார். தகவலறிந்த ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆத்தூர் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் விசாரணை செய்து வருகிறார்.

Tags : suicide ,Palayakayal ,
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...