×

திருராமேஸ்வரம் ஊராட்சியில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகிய 30 குடும்பத்தினர் திமுகவில் ஐக்கியம்

மன்னார்குடி, ஜன. 29: மன்னை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட திருராமேஸ்வரம் ஊராட்சி சின்ன கன்னித்தோப்பு கிராமத்தில் பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த 30 குடும்பத்தினர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட திருராமேஸ்வரம் ஊராட்சி சின்னகன்னித்தோப்பு கிராமத்தில் மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஊராட்சி தலைவரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான தலையாமங்கலம் பாலு, மன்னை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஐவி குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், சின்ன கன்னித்தோப்பு கிராமத்தை சேர்ந்த 30 க்கும் மேற் பட்ட குடும்பங்களை சேர்ந்த மாற்று கட்சியினர் மாவட்ட திமுக செயலாளரும், திருவாரூர் எம்எல்ஏ வுமான பூண்டி கலைவாணன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். முன்னதாக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் கட்சி கோடியை ஏற்றி வைத்தார். ஏற்பாடுகளை ஊராட்சி மன்றத் தலைவர் பாமாகண்ணன் செய்திருந்தார். இதில், மாவட்ட பிரதிநிதி அரிச்சபுரம் செல்வம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags : families ,party ,DMK ,
× RELATED கூடலூர் மாவட்டத்தில் கருப்புக் கொடி கட்டி மக்கள் போராட்டம்..!!