×

வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் கோரி பாமக சார்பில் இன்று மாபெரும் அறப்போராட்டம்: அம்பத்தூர் கே.என்.சேகர் அறிவிப்பு

திருவள்ளூர்: வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் கோரி பாமக சார்பில் இன்று மாபெரும் அறப்போராட்டம் நடக்க உள்ளதாக, பாமக மாநில துணை பொதுச் செயலாளர் அம்பத்தூர் கே.என்.சேகர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை.
பாமக மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்தும் வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு கோரி இன்று காலை 10 மணியளவில் திருவள்ளூர்  கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் அறப் போராட்டம் நடக்கிறது. மாநில துணை பொது செயலாளர்கள் வ.பாலயோகி, வி.எம்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். எனவே இந்த மாபெரும் அறப் போராட்டத்துக்கு மாவட்டத்தை சேர்ந்த பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் அனைவரும் அணி திரண்டு வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

Tags : protest ,Pamaka ,Vanni ,announcement ,Ambattur KN Sekar ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...