திருச்சி ஜன. 24: எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 5 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஜன.22ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது எடமலைப்பட்டி புதூர் செட்டியாபட்டி பாலம் அருகே கஞ்சா விற்ற எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் பால்வாடி தெருவைச் சேர்ந்த ஆல்பர்ட் (30) என்பவரை எ.புதூர் போலீசார் கைது செய்தனர். மேலும் ஷாருக்கான் என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்த 5 கிலோ 200 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
