செங்கல்பட்டு : மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது, அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என பிரதமர் மோடி முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா முதல் டிடிவி தினகரன் வரை கூறி வரும் நிலையில் எடப்பாடி இவ்வாறு பேசி உள்ளார்.
