×

அலுவலகங்கள் வெறிச் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்

பெரம்பலூர், ஜன.28: பெரம்பலூரில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் தேரடித் திடலில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார்.  துணை அமைப்பாளர் கருணாநிதி வரவேற்றார். கூட்டத்தில் திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் குத்தாலம் கல்யாணம், மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், தலைமை கழக பேச்சாளர் ஆலங்குடி செல்வராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  

இதில் மொழிப்போர் தியாகி மூங்கில்பாடி ரெங்கராஜூக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. இதில் மாநில நிர்வாகிகள் துரைசாமி, டாக்டர் வல்லபன், பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் நடராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் பாஸ்கர், நூருல் ஹிதா இஸ்மாயில், மாவ ட்டப் பொருளாளர் ரவிச்ச ந்திரன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நகர, பேரூர் நிர் வாகிகள், அனைத்து அணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.  முடிவில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மணிவாசகம் நன்றி கூறினார்.

Tags : Martyrs ,meeting ,Weerawansa Day ,DMK ,
× RELATED சேலத்தில் வெயிலின் கொடுமையை விளக்க...