×

150 கிலோ குட்கா பதுக்கியவர் கைது

ஈரோடு,ஜன.21: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆசாரி பட்டறை பகுதியில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் வந்தது. இதன்பேரில், சத்தியமங்கலம் போலீசார் நேற்று அங்கு சென்று திடீர் சோதனை செய்ததில், சத்தியமங்கலம் வடக்கு பேட்டையை சேர்ந்த பகவான் சிங் (31) என்பவர், 150 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பகவான் சிங்கை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 150 கிலோ குட்கா மற்றும் மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.

Tags : Erode ,Satyamangalam Asari ,Erode district ,Satyamangalam police ,Satyamangalam North Bay ,
× RELATED சென்னிமலையில் நாளை மின் நிறுத்தம்