×

மக்கள் வலியுறுத்தல் கரூர் வெங்கக்கல்பட்டி சர்வீஸ் சாலைகளை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை வாகனஓட்டிகள் கோரிக்கை

கரூர், ஜன. 28: கரூர் தாந்தோணிமலை சாலையில் திருச்சி பைபாஸ் சாலைக்கு முன்னதாக வெங்கக்கல்பட்டி அருகே மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக கரூரில் இருந்தும், பிற பகுதிகளில் இருந்து கரூருக்கு வரும் வாகனங்கள் வந்து செல்கின்றன. தொடர் வாகன போக்குவரத்து காரணமாக சர்வீஸ் சாலை மணற்பரப்புகளால் பரவி கிடக்கிறது. இதனால், இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சர்வீஸ் சாலைகளை தூய்மையாக பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். பனை ஓலைகளில் இருந்து விசிறி, ஓலை பெட்டி பனைபாய் போன்றவை தயாரிப்பது, பல்வேறு நிகழ்ச்சிகளின் போது தோரண வாயிலில் நுங்குவை தொங்க விட்டு அழகு பார்ப்பது, மேலும் திருமண விழாவில் கிப்ட் கொடுக்கும் பல்வேறு பொருட்களும் பனைஓலைகளால் செய்ய பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

Tags : Service Motorists ,Karur Venkakalpatti ,service roads ,
× RELATED ஆலத்தூர் பகுதி சர்வீஸ் சாலைகளில் மின்...