×

மார்த்தாண்டம் அருகே கல்லூரியில் நுழைந்து தாக்குதல்

மார்த்தாண்டம், ஜன.28: மார்த்தாண்டம் மாமூட்டுக்கடை அருகே தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. விரிகோடு பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் இதன் செயலாளராக இருந்து வருகிறார். கல்லூரியின் பின் பகுதியில் ஆனந்தராஜ் என்பவரது வீடு உள்ளது. கல்லூரியையொட்டி அவரது வீட்டுக்கு செல்லும் பாதை உள்ளது. இங்கு சாலை அமைப்பது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே பிரச்னை இருந்துவருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 60 பேர் கும்பல் கல்லூரி கேட் பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்து அலுவலக அறை உள்ளிட்ட பகுதிகளை அடித்து உடைத்தனர். இதனை தடுக்க முயன்ற பிரான்சிசை இரும்பு கம்பியால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். காவலாளிக்கும் அடி விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் விசாரணை நடத்தி நட்டாலம் பஞ். தலைவர் ராஜகுமார்(45), தாழவிளை ஜோசப்பாத்(32), ஷாஜி(35), அஜித்(30), அர்ஜுனன்(50) , கழுவன்திட்டு ஜோயல்(40), கர்ணன் உட்பட 60 பேர் கும்பல் மீது  வழக்குப்பதிவு செய்தனர்.

Tags : Assault ,Marthandam ,
× RELATED கடலூரில் நடத்துநர் தாக்கப்பட்டத்தை...