டெல்லி: 10ம் கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு தொல்லியல் துறை சமர்ப்பித்ததை அடுத்து கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு நடத்த ஒன்றிய அரசு அனுமதி அளித்துளளது. ஜனவரியில் திறந்தவெளி அருங்காட்சியகம் திறக்கப்பட்ட பிறகு பணிகள் தொடங்கப்படலாம் என தகவல் தெரிவித்துள்ளனர்.
