சென்னை: செவிலியர் பணிக்கு காலி பணியிடங்களே இல்லாத நிலை உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். போராட்டம் நடத்துவது செவிலியர்களின் உரிமை; ஆனால் விதிமுறைகளை தெரிந்துகொள்ள வேண்டும். காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும். ஒப்பந்த செவிலியர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி நிரந்தரம் வழங்கப்படுகிறது. என பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த செவிலியர்கள் போராடி வரும் நிலையில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
