×

தமிழகத்தில் காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகள் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை : ஐகோர்ட் கருத்து!!

சென்னை: தமிழகத்தில் காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகள் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசுத் துறை உயர் அதி​காரி​களின் வீடு​களில் தூய்​மைப் பணி, தோட்​டப் பணி மற்​றும் இதர வீட்டு வேலைகளில் கீழ்​நிலை பணி​யாளர்​களை ஈடு​படுத்​தும் ‘ஆர்டர்லி’ முறை, தமிழகத்​தில் பல்​வேறு துறை​களில் நடை​முறை​யில் இருந்து வந்​தது. இந்நிலையில், காவல் துறை​யில் ஆர்டர்லி முறையை முற்​றி​லு​மாக ஒழிக்க வேண்​டும் என்று சென்னை உயர் நீதி​மன்​றம் 2022-ம் ஆண்டு உத்​தர​விட்​டது. இந்த உத்​தரவை அதி​காரி​கள் முழு​மை​யாக அமல்​படுத்​த​வில்லை என்று நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், சி.குமரப்​பன் அமர்வு குற்​றம் சாட்​டி​யிருந்​தது.

இந்​நிலை​யில், இதே அமர்​வில் இந்த வழக்கு மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மாநில அரசு தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, தமிழக டிஜிபி சார்​பில் அறிக்கை தாக்​கல் செய்​தார்.‘தமிழகத்​தில் தற்​போது பணி​யில் உள்ள மற்​றும் ஓய்வு பெற்ற காவல் துறை அதி​காரி​களின் வீடு​களில் ஒரு​வர்​கூட ஆர்டர்லி​யாக இல்​லை’என்று அதில் கூறப்​பட்​டிருந்​தது. இதையடுத்து நீதிபதிகள், “தமிழக சிறைத் துறை போல​வே, காவல் துறை​யிலும் ஆர்டர்லி முறை முற்​றி​லு​மாக ஒழிக்​கப்பட வேண்​டும். சக ஊழியரை ஆர்டர்லி​யாக வீட்டு வேலை செய்​யப் பயன்​படுத்​து​வது சட்​டப்​படி குற்​றம் .அதே​போல, பணி​யில் இருப்​ப​தாகக் கூறி​விட்​டு, தனி்ப்​பட்ட வேலைகளில் ஈடு​படும் போலீ​ஸாரை​யும், போலீஸ் அதி​காரி​களை​யும் கண்​காணித்து நடவடிக்கை எடுக்க வேண்​டும். இது தொடர்பாக என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பது குறித்து இன்று தெரிவிக்க வேண்டும்,” என கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது “யாரையும் ஆர்டர்லியாக பயன்படுத்தக் கூடாது” என சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக டிஜிபி தெரிவித்தார். அப்போது நீதிபதிகள் “தமிழகத்தில் காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகள் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை” என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் டிஜிபிக்கு பாராட்டையும் தெரிவித்தனர். இந்த வழக்கு ஜனவரி 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai High Court ,State Department ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்