×

கூடுதல் வானிலை ரேடார்களை நிறுவுவது எப்போது?.. அரக்கோணம் எம்.பி. எஸ். ஜெகத்ராட்சகன் கேள்வி

டெல்லி: தேசிய ரேடார் அதிகரிக்கும் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் நிறுவ முன்மொழியப்பட்டுள்ள புதிய வானிலை ரேடார்களின் எண்ணிக்கை மற்றும் அதற்காக அடையாளம் காணப்பட்ட இடங்கள் குறித்து திமுக அரக்கோணம் மக்களவை உறுப்பினர் எஸ். ஜெகத்ராட்சகன் கேள்வி எழுப்பினார். ரேடார் வகை மற்றும் இயக்கப்பட்ட ஆண்டு உட்பட தமிழ்நாட்டில் தற்போது செயல்பாட்டில் உள்ள மொத்த வானிலை ரேடார்களின் எண்ணிக்கை என்ன? மாநில வாரியாக ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போது உள்ள வானிலை ரேடார்களின் மொத்த எண்ணிக்கை என்ன? ஒவ்வொரு மாநிலத்திலும் நிறுவப்பட வேண்டிய வானிலை ரேடார்களின் எண்ணிக்கை மற்றும் இருப்பிடத்தை தீர்மானிப்பதில் அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் காரணிகள் மற்றும் அளவுகோல்களின் விவரங்கள் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.

Tags : Arakkonam ,S. Jagadrakshan ,Delhi ,DMK ,Arakkonam Lok Sabha ,Tamil Nadu ,
× RELATED எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு...