×

முதியவர் தற்கொலை

 

பேரையூர், டிச. 9: பேரையூர் அருகே அத்திபட்டியை சேர்ந்தவர் சின்னப்பாண்டி (60). இவர் நேற்று முன்தினம் குடும்ப பிரச்னை காரணமாக தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சின்னப்பாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

Tags : Peraiyur ,Chinnapandi ,Athipatti ,Madurai Government Hospital… ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் சதுரங்க பயிற்சி முகாம்