மதுரை, டிச. 7: தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக தொடர்ந்து பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று (டிச.7) மதுரையில் நடைபெறும் பிரமாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். இதில் 1.41 லட்சம் பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முதல்வர், மேலமடை பகுதியில் வீரமங்கை வேலு நாச்சியார் பாலத்தை திறந்து வைத்து, முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இதனால் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
