அரூர்,ஜன.12: அரூர் அடுத்த கம்பைநல்லூரில் சாலை மிகவும் குறுகலாக இருந்ததால், கடுமையான போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து மெயின்ரோட்டில் ஒரு கிலோ மீட்டர் தூர சாலையை விரிவாக்கம் செய்ய ₹1.63 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சாலைப்பணிகள் துவங்கப்பட்டது. இப்பணிகளை உதவி கோட்ட பொறியாளர் ஜெய்சங்கர், இளநிலை பொறியாளர் பாஸ்கர் ஆகியோர் ேநற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் ஒப்பந்ததாரர் வேடியப்பன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.