டெல்லி: இந்நாள் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமைமிக்க நாள்; அரசமைப்பை சபை ஏற்றுக்கொண்ட நாள் என இந்திய அரசமைப்பு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த என்னைப் போன்ற ஒருவர் தலைவராக இருக்க காரணம் அரசமைப்பின் சக்தி. கனவு காணும் சக்தி, அதை நோக்கி உழைக்கும் சக்தியை பலருக்கும் அரசமைப்பு வழங்கியுள்ளது என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
