×

தமிழக முதல்வர் இன்று பெருந்துறை வருகை

ஈரோடு,  ஜன. 7: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பெருந்துறை வரும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று எம்.எல்.ஏ.  தோப்பு வெங்கடாச்சலம் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக முன்னாள்  அமைச்சரும், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம்  கூறியதாவது: வானம் பார்த்த பூமியாகவும், மழையை மட்டுமே நம்பி இருந்த  பெருந்துறை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் ரூ.1,652 கோடி  செலவில் அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தி பசுமை தொகுதியாக  பெருந்துறையை மாற்ற காரணமாக விளங்கிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  இன்று (7ம் தேதி) பெருந்துறை தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில்  ஈடுபடுகிறார். மேலும் கொடிவேரி கூட்டுகுடிநீர் திட்டம், அரசு  மருத்துவக்கல்லூரி, பாதாள மின்கேபிள் திட்டம் உள்ளிட்ட பல எண்ணற்ற  திட்டங்கள் பெருந்துறை தொகுதி மக்களுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே  நலத்திட்டங்களை கொடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்,  விவசாயிகள், நெசவாளர்கள், தொழில்முனைவோர், கூலித்தொழிலாளர்கள், மாணவர்கள்,  இளைஞர்கள், பெண்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்துறை  புதிய பஸ் ஸ்டாண்டு அருகில் மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து  கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,Tamil Nadu ,Perundurai ,
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...