×

குடும்ப அட்ைடகளில் மாற்றம் செய்ய கோரி புதுவேட்டக்குடி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

பெரம்பலூர்,ஜன.5: குடும்ப அட்டைகளில் மாற்றம் செய் யவேண்டி, புதுவேட்டக்குடி கிராமப் பொதுமக்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, புதுவெட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று ஒன்று திரண்டு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் நாளான நேற்று அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: குன்னம் தாலுகா, புதுவேட்டக்குடி கிராமத்தில் வசித்து வரும் மக்களின் குடும்ப அட்டைகளில் பிஎச்எச் என்று முன்னுரிமை உள்ளவர்கள் பட்டியல்கள் தவறுதலாக இடம் பெற்றுள்ளது. இதனைத் திருத்தி சரியாக சீரமைத்து தருமாறு கேட்டு க்கொள்கிறோம். அதேபோல் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள நபர்களின் குடும்ப அட்டைகளிலும் என்பி ஹெச்எச் என்று தவறுதலாக இடம் பெற்றுள்ளது. இதனை அனைத்தையும் ஆய்வு செய்து திருத்தி மாற்றி அமைத்துத் தர வேண்டும் எனஅந்த கோரிக்கை மனுவில் புதுவேட்டக்குடி கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  இந்த மனுவை அளித்து விட்டு அவர்கள் ஊர் திரும்பினர்.

Tags : Office ,Puthuvettakudi Village Collector ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...