தர்மபுரி, ஜன.4: பாலக்கோடு தெற்கு ஒன்றியம் பாடி ஊராட்சி கண்ணுகாரம்பட்டியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் குட்டி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பொன்.மகேஸ்வரன், மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி, முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் கருணாநிதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் தர்மபுரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் எம்எல்ஏ பங்கேற்று பேசினார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செல்வராஜ், முருகேசன், வையாபுரி, ரத்தினம், வேட்ராயன், ராமன், மாதேஷ், சுப்பையா, முருகன், வேலு, மூர்த்தி, கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.