×

வேளாண்மை சட்டத்திற்கு எதிராக கப்பலூர் டோல்கேட் முற்றுகை கொட்டும் மழையில் போராட்டம்


திருமங்கலம், ஜன.4: மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டங்களை திரும்பபெற கோரி எஸ்டிபிஐ கட்சியினர் நேற்று கப்பலூர் டோல்கேட்டினை முற்றுகையிட்டு கொட்டும் மழையில் போராட்டம் நடத்தினர். மத்திய பாஜ அரசு புதிதாக கொண்டு வந்த வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் நேற்று மதுரை திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் டோல்கேட்டில் முற்றுகை போராட்டம் நடத்தினர். மதுரை மத்திய தொகுதி சார்பில் நடந்த இந்த முற்றுகை போராட்டத்திற்கு தொகுதி செயலாளர் அபுதாகீர் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல்ஹமீது கலந்து கொண்டு வேளாண்மை சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பிய எஸ்டிபிஐ கட்சியினர் திடீரென டோல்கேட்டிற்கு புகுந்து மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். கொட்டும் மழையில் இந்த போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags : tollgate siege protest ,
× RELATED ரத்த அழுத்த பரிசோதனை முகாம்