×

திருமானூரில் நம்மாழ்வார் நினைவு தினம் அனுசரிப்பு

அரியலூர், ஜன.1: திருமானூரில் நம்மாழ்வாரின் நினைவு நாளையொட்டி, பொது மக்களுக்கு கருப்புக் கவுனி அரிசி கஞ்சி நேற்று வழங்கப்பட்டது.
திருமானூர் பேருந்து நிலையத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 8ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் பொது மக்களுக்கு பானகம் மற்றும் கருப்புக்கவுனி அரிசி கொண்டு தயாரிக்கப்பட்ட கஞ்சி ஆகியவை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க மாநிலத் தலைவர் தங்க. சண்முகசுந்தரம், டெல்டா இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சச்சிதானந்தம், ஆசிரியர் மாரியப்பன் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Nammazhvar Memorial Day ,Thirumanur ,
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி