×

லாட்டரி விற்ற 10 பேர் கைது

ஈரோடு, டிச.31: ஈரோட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்ததாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு, ஒரு நம்பர் லாட்டரி, 3 நம்பர் லாட்டரி விற்பனை போலீசார் துணையோடு நடந்து வருகிறது. இதுகுறித்து விரிவான செய்தி தினகரன் நாளிதழில் நேற்று வெளியானது.  இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக கருங்கல்பாளையத்தில் 4 பேர், ஈரோடு டவுன், பவானி, அந்தியூர், ஆப்பக்கூடல், சித்தோடு, வெள்ளித்திருப்பூர் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் தலா ஒருவர் என 10 பேரை மட்டுமே போலீசார் பெயர் அளவுக்கு கைது செய்துள்ளனர். ஆனால், லாட்டரி மொத்த விற்பனையாளர்களை அடையாளம் தெரிந்தும் போலீசார் கைது செய்யாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

Tags :
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...