×

கரீபியன் கடலில் போர்க்கப்பல்கள்; வெனிசுலாவை தாக்க அமெரிக்கா முயற்சியா?: போர் பதற்றம் அதிகரிப்பு

வாஷிங்டன்: போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதாகக் கூறி, வெனிசுலா அருகே அமெரிக்கா தனது படைகளைக் குவித்து வருவது, இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஆட்சிக்கு வந்தது முதலே, அந்நாட்டுடன் அமெரிக்கா தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. வெனிசுலா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவளித்து வருகிறது. மேலும் அதிபரின் ஆட்சியை கவிழ்க்கும் சதி வேலைகள் நடப்பதாக பரபரப்பு புகாரும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘யுஎஸ்எஸ் ஜெரால்டு ஃபோர்டு’-ஐ, அதன் தாக்குதல் குழுவுடன் கரீபியன் கடலுக்குச் செல்லுமாறு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே கரீபியன் கடலில் படைகளைக் குவித்து வரும் அமெரிக்கா, தற்போது மேலும் எட்டு போர்க்கப்பல்கள், ஒரு அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் எஃப்-35 ரக போர் விமானங்களையும் அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது. அமெரிக்காவுக்கு பதிலடியாக, வெனிசுலா அதிபர் மதுரோ, தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ‘ஆயுதப் போராட்டத்தில்’ ஈடுபடுவோம் என எச்சரித்து, தனது ராணுவப் படைகளைத் தயார் நிலையில் வைத்துள்ளார். இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

Tags : Caribbean Sea ,US ,Venezuela ,Washington ,President ,Nicolas Maduro ,
× RELATED ஆஸ்திரேலியாவில் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு!