×

லாட்டரி விற்றவர் கைது

மார்த்தாண்டம், அக். 25: களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகிந்த் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மார்க்கெட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த, நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியை சேர்ந்த எட்வின் ஜோகன் (52) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.50 மதிப்புள்ள 24 லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags : MARTHAM, OCT ,Sub-Inspector ,Mahind ,Kaliakawla Police ,Mundinam Market ,Edwin ,Ramanputur ,Nagarko ,Tamil government ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்