×

பாஜக விரித்த வலையில் இருந்து ரஜினி வெளியே வந்துவிட்டார் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

திருவண்ணாமலை, டிச.30: பாஜக விரித்த வலையில் இருந்து ரஜினி வெளியே வந்துவிட்டார் என காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். திருவண்ணாமலையில் நேற்று காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி:
நடிகர் ரஜினிக்கு அரசியல் ஆர்வம் இல்ைல. அவர் அரசியலுக்கு வர மாட்டார் என ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன். அவர் ஆன்மிகத்தில் விருப்பம் உள்ளவர். ஆன்மிகத்தில் விருப்பம் உள்ளவர்கள் தேர்தல் அரசியலை விரும்ப மாட்டார்கள்.

அரசியலுக்கு வரக்கூடாது என்ற முடிவில்தான் ரஜினி இருந்தார். 1996ம் ஆண்டு ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டும் என சிலர் அவரிடம் ஆலோசனை தெரிவித்தனர். அப்போது, அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்தார். இப்போது இருப்பதைவிட ரசிகர் பலமும், செல்வாக்கும் அதிகமாக இருந்தது. அப்போேத அவர் அரசியலை விரும்பவில்லை.

பாஜக மிகுந்த அழுத்தத்தை கொடுத்து, ரஜினியின் அரசியல் வரவையும் கெடுத்து, உடல் நலத்தையும் ெகடுத்துவிட்டது. பாஜகவுக்கு இது மகத்தான தோல்வி. ரஜினி கட்சி ஆரம்பித்தால், மாநில அரசுக்கு எதிரான வாக்குகள் திமுகவுக்கு வராமல் தடுத்துவிடவும், அதிமுகவை வெற்றிபெற வைக்கவும் முடியும் என பாஜகவினர் கருதினர். ஆனால், அந்த கணக்கு தவறான கணக்கு. அது பொய்த்துவிட்டது. பாஜக விரித்த வலையில் இருந்து ஏதோ ஒரு வகையில் ரஜினி வெளியே வந்துவிட்டார். அதனால், அவரை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Rajini ,KS Alagiri ,BJP ,interview ,Congress ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...