சத்தியமங்கலம், டிச. 29: சத்தியமங்கலம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ரூ..4.06 லட்சத்துக்கு ஏலம் போனது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நேற்று நடந்தது. சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள பவானிசாகர், சிக்கரசம்பாளையம், கே.என்.பாளையம், புன்செய்புளியம்பட்டி, அரசூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் 2,840 வாழைத்தார்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் கதளி ஒரு கிலோ, ரூ.38, நேந்திரன் ரூ.16க்கு விற்றது. பூவன் தார் ரூ.410, தேன்வாழை ரூ.460, செவ்வாழை ரூ.580, ரொபஸ்டா ரூ.290, மொந்தன் ரூ.280, பச்சைநாடன் ரூ.360, ரஸ்தாளி ரூ.490க்கும் ஏலம் போனது. விற்பனைக்கு வந்த 2,840 வாழைத்தார்கள் 4.06 லட்சத்துக்கு விற்பனையானதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.