×

பாவூர்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மின்னணு பரிவர்த்தனை சேமிப்பு கிட்டங்கி அடிக்கல் நாட்டு விழா

பாவூர்சத்திரம், டிச. 26:  பாவூர்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மின்னணு  பரிவர்த்தனை சேமிப்பு கிட்டங்கி கட்டுவதற்கு தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ அடிக்கல்நாட்டினார்.  பாவூர்சத்திரத்தில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விளைப்பொருட்களை சேமித்தல், தரம் பிரித்தலுக்கான பல்வேறு வசதிகள் செய்துதரபட்டுள்ளன. இதன்தொடர்ச்சியாக தமிழ்நாடு நீர்வள மேலாண் சிற்றாறு வடிநில திட்டம் மற்றும் நெல்லை விற்பனை குழு சார்பில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் மின்னணு  பரிவர்த்தனை சேமிப்பு கிட்டங்கி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. தலைமை வகித்த தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ, அடிக்கல் நாட்டினார். இதில் தென்காசி மாவட்ட வேளாண் துணை இயக்குநர், வேளாண் விற்பனை மற்றும் வணிகப் பிரிவு நிர்வாகி கிருஷ்ணகுமார், ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலாளர் விஷ்ணு அப்பன், பாவூர்சத்திரம் வேளாண் உதவி இயக்குநர் உதயகுமார், கண்காணிப்பாளர் சகாதேவன், தெற்கு மாவட்ட அதிமுக அவைத்தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றியச் செயலாளர்கள் அமல்ராஜ், இருளப்பன் ஜெ. பேரவை இணைச் செயலாளர் சரவணன் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் என ஏராளமானோர்
பங்கேற்றனர்.

Tags : Ceremony ,Electronic Exchange Storage Warehouse ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா